மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
சிறிபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் யானையிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கியே இவ்வாறு மரணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.