உள்நாடு

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதுளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களுக்கே நாளை (9) மாலை 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களுக்கு மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு, சுவர் இடிந்து விழும், பாறை சரிவு, மண் சரிவு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *