கொங்கோவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 55 பேர்பலி !
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை கொங்கோவில் பல்வேறு தீவிரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
தீவிரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் கொங்கோ பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கோவின் தென்கிழக்கில் உள்ள கிராமங்களில் தீவிரவாதிகள் நேற்று(11) தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
கிராமங்களில் உள்ள வீடுகளைதீவிரவாதிகள் தீ வைத்து எரித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.