வாழைச்சேனை ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று (12) மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அதனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.