உள்நாடு

மின் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு!

மின்சாரக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு வரும் 15ம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 08ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான எழுத்துமூல மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *