உலகம்

மற்றுமொரு நாட்டின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்.

இஸ்ரேல் மற்றுமொரு நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 80 பேர் காயமடைந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனம், லெபனான், ஈரான், ஏமன் ஆகிய நாடுகளின் இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *