உள்நாடு

ஜப்பான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுரகுமார.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் TSUGE Yoshifumi ஆகியோருக்கிடையில் இன்று (22) பிற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்கவின் ஜப்பான் விஜயத்திற்கு, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *