உள்நாடு

1.4 பில்லியன் ரூபா கோரும் தபால் திணைக்களம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவினங்களைக் கணித்து, 1.4 பில்லியன் ரூபா தேவைப்படுவதற்கான விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்கவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சாதாரண தபால், பதிவுத் தபால், எழுது பொருட்கள், போக்குவரத்து, நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட பல செலவினங்களுக்காக இந்த மதிப்பீடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு மட்டுமே என்பதால், கோரப்பட்ட பணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *