உள்நாடு

நாட்டிலுள்ள யானைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை.

நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுப்பை நடத்த வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இந்த நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5878 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 வருடங்களுக்கு பின்னர் இவ்வருடம், அனைத்து வனவிலங்கு அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *