உள்நாடு

கொழும்பு மாநகர சபைக்கு ஆப்பு வைத்த நிறுவனம்!

கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்துவதற்காக தானியங்கி அமைப்பின் ஊடாக பணம் வசூலித்த நிறுவனம் 90 மில்லியன் ரூபாவை கொழும்பு மாநகர சபைக்கு செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டு இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவின் பிரதி பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

இத்திட்டத்தில் நிலவும் குறைபாடுகள் காரணமாக அடுத்த வருடத்திற்குள் புதிய இலத்திரனியல் முறைமையை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *