விளையாட்டு

இந்தியாவுக்கு எதிராக 27 வருடங்களுக்கு பின் சிறந்த வெற்றியைப் பெற்று கொண்டது இலங்கை!

இந்திய சுற்றுப்பயண குழுவை வீழ்த்தி மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை இலங்கை பெற்றது.

கொழும்பு ஆர்பி பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (07) நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 249 ரன்கள் எடுத்தது, இதற்கு பதிலளித்த இந்திய அணி 26.1 ஓவரில் 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி டை ஆனபோதிலும், மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரில் இலங்கை அணி பெற்ற வெற்றி, இந்தியாவுக்கு எதிராக 27 வருடங்களுக்கு பின் பெற்ற முதல் தொடரின் வெற்றி எனக் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *