விளையாட்டு

ஒருநாள் தொடரை பறிகொடுத்த இலங்கை மகளிர் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

அயர்லாந்து மகளிர் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் இரண்டாவது ஆட்டத்திலும் தோல்வி கண்ட இலங்கை மகளிர் அணி தொடரை இழந்த நிலையில் மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 

நேற்று முன்தினம் பெல்பாஸ்டில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அயர்லாந்து அணிக்கு வழங்கியது. 
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணியில் ஹர்சிதா சமரவிக்ரம அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவர் சிறப்பாக ஆடி தன்னுடைய கன்னி சதத்தை பதிவுசெய்தார். இவர் 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்துவந்த வீராங்கனைகள் தொடர்ச்சியாக விக்கட்டுகளை பறிகொடுத்தனர்.  

இறுதியில் இலங்கை மகளிர் அணி 48 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்று 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறும் நிலையில் இலங்கை மகளிர் அணி ஆறுதல் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மூன்னதாக நடைபெற்ற டி20 சர்வதேச தொடர் 1-1 என சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *