விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு டெஸ்ட் போட்டி!

டெஸ்ட் கிரிக்கெட்டின் 150-வது ஆண்டை கொண்டாட இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்படவுள்ளது.

உலகம் முழுவதும் விளையாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட், ஒருநாள், ரி20 என சர்வதேச அளவில் விளையாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் முடிவைக் கொண்டாடும் வகையில் வரும் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877ம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 1977ம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *