உள்நாடு

மலையக ரயில் சேவையில் பாதிப்பு

பலான பிரதேசத்தில் மரமொன்று வீதியில் வீழ்ந்ததால் மலையகப் பாதையில் புகையிரத சேவை தடை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரைக்கும் பதுளையி மற்றும் கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் புகையிரதங்கள் இதனால் தாமதமாகலாம் எனவும் நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

புகையிரத பாதையில் வீழ்ந்துள்ள மரத்தை வெட்டி அகற்றி மலையக ரயில் பாதையில் புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *