உள்நாடு

விவசாய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு 15,000 ரூபாய் மானியம்!

எதிர்வரும் பெரும்போகத்திற்காக நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய விவசாய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக ஒரு ஹெக்டேயருக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஹெக்டயார் விவசாய நிலத்திற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக இந்த மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *