உலகம்

காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்.

காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

640,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி திட்டம் பயனுள்ளதாக இருக்க, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் குறைந்தது 90 சதவீதம் பேருக்கு குறுகிய காலத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

25 வருடங்களில் காசா பகுதியில் போலியோ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதைக் கண்டறிந்த ஐ.நா. இந்த வைரஸ் அதிக குழந்தைகளைத் தாக்கினால், அது அப்பகுதியில் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *