உள்நாடு

வருட இறுதியில் டெங்கு நோய் பரவல் தீவிரமடையும் சாத்தியம்!

தற்போதைய நிலவரத்துக்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மழையுடனான காலநிலையையடுத்து தற்போதைய டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், டெங்கு நோய் அதிகளவில் பதிவாகும் பகுதிகளில் தற்போது நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

எனவே, இந்த நிலைமை தொடருமாயின் வருட இறுதியில் நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடையக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *