உள்நாடு

ராகமையில் இரு பாடசாலை மாணவர்கள் மாயம்.

ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம படுவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன மாணவர்கள் இருவரும் கடந்த 04 ஆம் திகதி ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென காணாமல் போயுள்ளதாக அவர்களது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *