உள்நாடு

மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன், மனைவி பலி!

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய நபரும் அவரது 32 வயது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *