உள்நாடு

எல்ல, கினலன் பகுதியில் காட்டுக்கு தீ வைத்த சந்தேகநபர் கைது !

எல்ல பொலிஸ் பிரிவில் கினலன் பகுதிக்கு அருகில் காட்டுக்கு தீ வைத்த சந்தேகநபர் ஒருவரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 24 ஆம் திகதி கினலன் பகுதிக்கு அருகில் காட்டுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை ( 25) மேலும் ஒரு காட்டுப் பகுதிக்கு தீ வைக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எல்ல கினலன் தோட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபரை அவதானித்து போது அவர் மேலும் வனப்பகுதி ஒன்றுக்கு தீ வைக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 24 ஆம் திகதி கினலன் பகுதியில் காட்டு தீயினால் சுமார் 15 ஏக்கர் காடு எறிந்து நாசமாகி உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை (26) பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *