Healthஉள்நாடு

நான்கு மாகாணங்களை அச்சுறுத்தும் டெங்கு.

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, காலப்பகுதி வரை 39,698 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 16,766 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுஇம்மாகாணத்திலேயே ஆகும்.

மேலும், வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,792 நோயாளர்களும் மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4,091 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,012 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 19 டெங்குமரணங்கள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *