உள்நாடு

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுபாசாலைகளுக்கும் பூட்டு

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபாசாலைகளும் மூடப்படும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மது அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், மது அருந்துவதால் நாட்டில் நாளொன்றுக்கு 50 மரணங்கள் பதிவாகுகின்றன.

எனவே, உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபாசாலைகளும் மூடப்பட வேண்டும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *