உள்நாடுவானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *