உள்நாடு

சம்மாந்துறையில் யானையின் அட்டகாசம்

யானை ஒன்று திடிரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது

.இன்று காலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 – குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீதியில் யானை ஒன்று குடியிருப்புக்களுக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 தினங்களாக தனியன் யானை ஒன்று சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்ற பகுதிகளில் அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே சம்பந்தம்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.-அம்பாறை நிருபர் ஷிஹான்-.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *