வானிலை

அடுத்த 24 மணி நேரத்திற்கு கடும்மழை

அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய மின்னல் மற்றும் காற்று தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *