உள்நாடு

(கைவிடப்பட்டுள்ள) கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான 11000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார உத்தரவு

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியைக் குறுகியகால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (10) அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

அதற்கமைய 5 ஏக்கரை விடக் குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (10) பிற்பகல் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *