காசாவில் பாடசாலை மீது தாக்குதல்: 28 பேர் பலி.
காசாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 28 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அந்தத் தாக்குதலில் 54 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.