உள்நாடு

பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை.

அத்தனகலு ஓயா பெருக்கெடுத்த காரணத்தால், துனமலே பகுதியில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எஸ். பி. சி. சுஷீஷ்வர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர் “கம்பஹா மாவட்டத்தினூடாக பாயும் அத்தனகலு ஓயா பெருககெடுப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமை காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாயம் தொடர்கிறது.திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்லை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா அல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவின் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை தொடர்கிறது.

மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மேலும் சற்று அதிகரிக்கலாம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *