உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை குறித்த இறுதி தீர்மானம் இன்று

சர்ச்சைக்குரிய சூழலை எதிர்கொண்டுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

எனினும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.மூன்று வினாக்கள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், பரீட்சைக்கு முன்னர் 03 கேள்விகள் மாத்திரமே வெளிவந்திருந்தன என்பது அந்த பரீட்சை குழுக்களின் இறுதித் தீர்மானமாகும்.புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்கள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆனால் முழுமையான வினாத்தாள் வெளியிடப்பட்டதாகக் கூறி பெற்றோர்கள் குழு ஒன்று, செய்தியாளர் சந்திப்புகளை நடாத்தியும் பல சந்தர்ப்பங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்தது.

இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடியதையடுத்து புலமைப்பரிசில் பரீட்சை விசாரணைகள் முடியும் வரை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *