Healthஉள்நாடு

மீண்டும் தலைதூக்கும் டெங்கு காய்ச்சல்

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 40,657 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் மீண்டும் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் மொத்தம் 1,247 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். பெரும்பாலான நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் அதிக தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த மழை நிலைமையால் எதிர்காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *