இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (18) உறுதி செய்துள்ளர்.
இலங்கையில் ஏற்கனவே 537 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள மரணத்துடன், இலங்கையில் இதுவரை 538 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக,அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.