உள்நாடு

இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொட பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தானை, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் நாகொட கந்தானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.

உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் எனவும், தனிப்பட்ட தகராறு காரணமாக இம் மோதல் இடம் பெற்றதாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ,சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *