புலமைப்பரிசில் பரீட்சை மீள்திருத்தத்திற்கு கால அவகாசம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை எதிர்வரும் ஜனவரி 27 முதல் பெப்ரவரி 06 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படுமிடத்து, 1911 அல்லது பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் – 0112784208/ 0112784537/ 0112786616/ 0112785922 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.