உலகம்

சீனாவில் செயற்கை சூரியன் உருவாக்கம்

செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய பரிசோதனை முறையைச் சீனா வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது. இந்த முறைமை எதிர்காலத்தில் மின் உற்பத்தியை மொத்தமாக மாற்றக்கூடியதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் காலத்தில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் கருவிகள் வந்துவிட்டதால் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.

இதைச் சமாளிக்க மின் உற்பத்தியை அதிகரிக்கவும் சர்வதேச அளவில் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். அதன்படி சீனா மின்சாரத்தை நியூக்ளியர் ஃப்யூஷன் முறையில் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாகச் சீனா அணுக்கரு இணைவு (nuclear fusion) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதை ஆய்வாளர்கள் ‘செயற்கை சூரியன்’ என்றும் கூட அழைக்கிறார்கள். இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா சுமார் 1,000 வினாடிகள் நீடித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2023ல் சீன ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வை நடத்திய போது பிளாஸ்மா 403 வினாடிகள் இருந்த நிலையில், இப்போது அதை முறியடித்து சுமார் 1000 நொடிகள் பிளாஸ்மா நீடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *