உலகம்

எகிப்தில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி

எகிப்து நாட்டின் கிசா மாகாணம் கெர்டாசா நகரில்  இன்று காலை அடுக்குமாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததோடு  3 பேர் படுகாயமடைந்தனர்.

 குறித்த சம்பவம் தொடர்பாக  தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எரிவாயு வெடிப்பு ஏற்பட்டதாலேயே குறித்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட  தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து  பொலிஸார் மேலதிக விசாரணைகளை  நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *