சம்பியன்ஸ் டிராபியில் அர்ஷ்தீப், ஹர்ஷித் இருவரில் விளையாட போவது யார்?
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் ஆடும் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சமி இடம் பெறுவார் என்று தெரிகிறது. ஆனால் 2 ஆவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பங்களாதேஷிற்கு எதிரான முதல் போட்டிக்கான இந்தியாவின் ஆடும் அணியில் 2 ஆவது வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் இடது கை பந்துவீச்சாளர் என்பதால் ராணாவை தாண்டி அவருக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.