கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி
நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் இரண்டு நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.