கடும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக மத்திய மலைநாட்டில் எந்த நேரத்திலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார், வன பாதுகாப்பு, வனவிலங்கு துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்க் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அத்துடன், காடுகளில் விழும் வலுவான சூரிய ஒளி காரணமாக, அந்தக் காடுகளில் உள்ள தாவரங்கள் வெயிலால் எரிந்து எந்த நேரத்திலும் தீப்பிடிக்கும் நிலையில் உள்ளன.
மாத்தளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அமைந்துள்ள பல இயற்கை காடுகளில் இந்த நிலைமையைக் காணலாம். மாத்தளை மாவட்டத்தின் எல்லையில் உள்ள நக்கிள்ஸ் மலைத்தொடரின் சில பகுதிகள், ஹந்தன மலைத்தொடர் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஹோட்டன்தன்ன ஆகியவை அதிக ஆபத்துள்ள நிலையில் உள்ளன.
கடந்த சில நாட்களாக பல ஒதுக்கப்பட்ட காடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எந்த நேரத்திலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், பொது மக்கள் மற்றும் இந்த இடத்தைப் பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ், வன பாதுகாப்பு, வனவிலங்கு துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.