படப்பிடிப்புக்காக இலங்கை வரவுள்ள பராசக்தி படக்குழுவினர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்நிலையில் மதுரையில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது, நேற்று (23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயம் ரவி மோகன் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் ,
‘முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவிருக்கிறது. இலங்கைக்கு மிக விரைவில் நாங்கள் செல்லவிருக்கிறோம்.’ எனக் கூறியிருந்தார்.