உள்நாடு

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் ஒரு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (10) பிற்பகல், மருதானையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *