இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த வகையில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக அவர் மேற்கொள்ள இருக்கும் இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணமாக இப்பயணம் அமையும் என கூறப்படுகிறது.
முதல் சர்வதேச பயணத்தின் போது துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். உரையின் போது சட்டவிரோத குடியேற்றம், மத சுதந்திரம் மற்றும் தேர்தல் விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய அரசாங்கங்களை ஜே.டி. வான்ஸ் கடுமையாக சாடியிருந்தார். இவரது உரை உலகளவில் எதிர்வினைகளை ஏற்படுத்தி இருந்தது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை குறித்து அவர் பேசிய கருத்துக்கள் அமெரிக்க அரசுடன் நட்புறவு கொண்ட நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.