உலகம்

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்

சவுதி அரேபியாவில் அமெரிக்கா – உக்ரைனுக்கிடையில்    நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாதகால  போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தகுந்த பொருளாதாரத் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

வெள்ளைமாளிகையில் நேற்று (12) செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் கூறுகையில்,

“எங்களுடைய பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் செல்ல இருக்கின்றனர். ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ரஷ்யாவுக்கு பேரழிவினை ஏற்படுத்தும் அந்நாட்டுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் காரியங்களை என்னால் செய்ய முடியும். அம்முடிவினை நான் விரும்பவில்லை. ஆனால் நான் அமைதியைக் காண விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளதுடன்  ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் சம்மதம் தெரிவித்துள்ளது.  

 இதேவேளை இந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும் வான்வழித்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆனால் ரஷ்யா இதுகுறித்து இன்னும் உறுதியான நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. ஒரு முடிவினை எட்டுவதற்கு முன்பாக அமெரிக்காவிடமிருந்து தகவலுக்காக காத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *