உள்நாடு

மலையக ரயில் சேவை பாதிப்பு

கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த ரயில் இன்று (15) அதிகாலை கண்டியிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகாமையில் காலை 10 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த ரயிலில் பதுளை நோக்கி பயணித்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் சிரமங்களுக்குள்ளாகினர்.

 அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை ரயில் திருத்தக் குழுவினர் மேற்கொண்டு வருவதாக நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *