உலகம்

காசாவில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு

வடக்கு காசாவில் இஸ்ரேல் நேற்று மாலை நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். 

நேற்று மாலை வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான் வழியாக நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் இந்தோனேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *