உள்நாடு

நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய இராணுவ மேஜர் கைது

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீரென உள் நுழைந்து வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ மேஜர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

கைது செய்யப்பட்ட மேஜர், விடுமுறைக்காக நுவரெலியாவுக்கு வருகை தந்த நிலையில் பலத்த காயங்களுடன் இன்று (18) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த போது வைத்தியசாலையில் அனுமதிக்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளை பிரயோகித்து வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளார்.

பின்னர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர சேனவிரத்ன சம்பவ இடத்திற்கு வருகை தந்த போது அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக வைத்தியசாலை நிர்வாகம் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *