மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்
குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் ரத்தொட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம பகுதியில் பதிவாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் வைத்தியசாலையில் ஊழியர்களாக பணிபுரிந்தவர்கள் எனவும் குறிந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவம் இன்று (22) அதிகாலை 5 மணியளவில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேக நபரான கணவர், ரத்தொட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ரத்தொட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.