உள்நாடு

கனடாவுக்கு செல்ல முயன்ற 11 பேர் விமான நிலையத்தில் கைது

மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்கு  செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 11 இலங்கையர்களும் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

டுபாய்க்குப் புறப்படும் ஸ்ரீலங்கன் எயார்ர்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் நேற்று (24) மாலை 6.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த விமானத்தில் டுபாய் சென்று அங்கிருந்து கனடாவின் டொராண்டோ செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவையும் பெற்றிருந்தனர். இவர்களை இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *