உலகம்

தென்கொரியாவில் காட்டுத்தீ : அவசர கால நிலை அறிவிப்பு

தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதற்கிடையே அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எனவே அங்கு அவசரகால நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் 600 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *