உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்தெரிந்த பஸ்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்று இன்று (28) பிற்பகல் திடீரென தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பஸ்ஸில் சாரதியும் மற்றொரு நபரும் இருந்ததால், தீ விபத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கு விரைவுச்சாலை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இத் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *