உள்நாடு

பதுரலிய பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு

பந்துரலிய பொலிஸ் பிரிவின் கெலின்கந்த வீதியில் உள்ள ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (27) மாலை தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி, 2 தோட்டாக்கள் மற்றும் 5 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *